Thursday, August 23, 2012

TNPSC - ஓர் கண் துடைப்பா?

இன்றைய தமிழக இளைஞர்கள் பலரின் கனவு... ஓர் அரசாங்க வேலை...

அரசாங்க வேலை பெற இரு வகையான வழிமுறைகள் கையாளப்படுகின்றன..

1. வயது மூப்பின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அதன் படி வேலை கொடுப்பது.

2. போட்டித் தேர்வுகளை வைத்து அதில் அதிக மதிப்பெண் பெறுபவர்களை தேர்வு செய்து வேலை அளிப்பது.

இதில் முதலாவதாக கூறப்படடது பட்டயக் கல்விகளுக்கும் பின்னதாக கூறப்பட்டது பட்டங்களை பெற்றவர்களுக்கும் காலம் காலமாக இருந்து வரும் வழக்கம்.

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission- TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும். 1929ல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பெற்ற ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பெற்றது. அப்பொழுது இதன் பெயர் The Madras Service Commission. மாநில மறு சீரமைப்புக்குப் பின் 1957- ல் இது மதராசு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Madras Public Service Commission) என்று பெயர் மாற்றம் செய்யப்பெற்று, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என மாற்றம் பெற்ற பிறகு இதுவும் தானாகவே ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்” என்று மாறிவிட்டது.

ஆம் , நாம் சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே TNPSC தொடங்கப்பட்டு தனது அரசாங்க வேலை அளிக்கும் பணியினை மத்திய அளவில் SSC போல் செய்து வருகிறது. 

பழமை எனினும் தனது ஒவ்வொரு கால கடடத்திலும் தேர்வு முறையில் புதுமைகளை கையயாண்டு இன்று இளைஞர்களின் கனவினை கொஞ்சம் அதிகரித்து விட்டுள்ளது என்பதே உண்மை.



தமிழக இளைஞர்களில் பெரும்பாலானோர்  ஏன் TNPSC ஐ நம்பி இருக்கிறார்கள்? 

 காரணம் இருக்கிறது, மத்தியில் அரசாங்க பணியில் சேர ஆங்கிலம் நன்றாக அறிந்திருக்க வேண்டும்... இல்லாவிட்டால் இந்தியாவாவது அறிந்திருக்க வேண்டும்.. ஆனால் TNPSC தேர்விற்கு தமிழ் தெரிந்திருந்தால் போதுமானது.

தமிழக அரசியலில் இந்தி எதிர்ப்பு போராட்டம் காரணமாக நாம் பல நவோதயா பள்ளிகளை இழந்துவிட்டோம்.. இதன் விலைவாக இன்று கிராமபுரங்களில் உள்ள திறன்மிக்க மீத்திறன் மாணவர்கள் சாதாரண அரசு பள்ளிகளில் படித்து அவர்களின் திறன்கள் இன்று இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றன.

அது மட்டும் இல்லாமல், தமிழ் தமிழ் என்று நாம் தமிழை வாழ வைக்கிறோமோ இல்லையோ அதனை நாம் சிறிது சிறிதாக சாகடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.
இலங்கை,  சிங்கப்பூர் , மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள   தமிழர்கள் தமிழை அவ்வளவு அழகாக பேசுகின்றனர்! அவர்களுக்கு ஆங்கிலமும் தெரியும், பிலிபைன்ஸ் மொழியும் தெரியும் , கூடுதலாக சீன மொழியும் தெரியும்...அங்கு ஒளிபரப்பாகும் பன்பலை வானொலிகளில் கூட தமிழ் தெள்ளத் தெளிவாக இருக்கிறது.

ஆனால், தமிழகத்தில் இன்று நாம் தமிழையும் ஒழுங்காக பேசாமல்... வேலை வாய்ப்பினை அளிக்கும் ஆங்கிலத்தினையும் முறையாக கற்காமல்... கூடுதலாக ஒரு இந்திய மொழியை கூட கற்க மனமில்லாமல் இருக்கிறோம் என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது.


 வினாத்தாள் வெளியாகும் விவகாரம்..

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்று மாட்டி இருக்கிறார்கள் சிலர்... இதில் பலரை பற்றிய தகவல்கள் வெளி வரவில்லை...

வினாத்தாள் வெளியாகாவிட்டால் என்ன நடந்திருக்கும்?

இத்தனை ஆண்டுகளாக 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் ஒருவர் கூட இருந்திருக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை...

ஒன்றை யோசித்து பாருங்கள் சென்ற VAO தேர்வில் 200 க்கு 200 மதிப்பெண் பெற்றவர்கள் மட்டும் 200 பேர்...

இப்படி முழு மதிப்பெண்ணை அள்ள இது என்ன எளிமையான தேர்வா? அனைத்து வினாக்களுக்கும் விடை தெரிய இந்த மதிப்பெண்களை எடுத்தவர்கள் என்ன அனைத்தும் அறிந்த கலைக்களஞ்சியமா?
என்ன நடக்கிறது TNPSC இல்?

காலம் காலமாக தேர்வு எழுதி எழுதி சலித்து போன பலருக்கு தெரியும் TNPSC என்ன செய்கிறது என்று.

  • ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் மட்டும் கூட்டாக வேலை கிடைத்து செல்வதும்.
  •  இதற்கென இயங்கிவரும் பயிற்று மையங்களில் படிப்பவர்களில் பலருக்கு வேலை கிடைப்பதும் என..
இது மட்டும் அல்லாமல் பணம் கொடுத்தால் வேலை என்றும் இருந்த காலங்கள் உண்டு.. இப்போதும் மறைமுகமாக சிலர் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற செய்தி நீங்களும் நானும் அறிந்ததே..

பல அதிகாரிகளையும் அரசாங்க பணியாளர்களையும உருவாக்கும் இவ்வகையான அமைப்பு முறையில் அடிப்படையிலேயே ஒரு பெரிய தவறு காலம் காலமாக இருந்து வருகிறது ...

அதுதான் ”பணம் கொடுத்தால் எல்லாம் முடிந்துவிடும் என்ற ஒரு நம்பிக்கை”

இந்த நம்பிக்கையை மெய்யாக்க  டீபாய் முதல் இதற்கான உயர் பதவியில் இருக்கும் ஆட்கள் வரை தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.  இந்த தவறால் எத்தனை சதவிகித அளவிற்கு உண்மையான முறையில் இதுவரை வேலை அளிக்கப்பட்டுள்ளது என்பது கேள்விக் குறியே..

எதற்கு இந்த அயோகியதனம்? திறமை உள்ளவனுக்கு வேலை என்று ஒரு பதாகையை மாட்டிவிட்டு உள்ளே சென்றால் பணம் கொடுத்தால்தான் வேலை என்று கூறுவது இன்றைய தனியார் நிறுவனம் முதல் அரசாங்க வேலை வழங்கும் நிறுவனங்கள் வரை தொடர்ந்து நடந்துவருகின்றன.

அப்படி பணம் பெறுவதாக இருந்தால் அரசாங்கமே இந்த பணத்தினை ஒரு வேலைக்கு இவ்வளவு என்று வெளிப்படையாக அறிவித்து அதன்படி பணி வழங்கினால் அரசாங்க லாபம் கூடுமல்லவா?



அது சரி இனி என்ன செய்யலாம்?

மக்களால் மக்களுக்காக நடக்கும் ஆட்சியில்... எதையும் நாம் முடிவு செய்ய முடியாது..உண்மைதானே!. அது சரி உங்களின் எண்ண பிரதிபலிப்பு என்ன இந்த விடயதில் கீழே பதிவிடுங்கள்...
Guestbook

1 comment:

  1. பெருமை நண்பா ...இந்த விஷயத்த தைரியமா சொன்னதுக்கு ......

    ReplyDelete