Wednesday, February 13, 2013

நுனிப்புல் மேயாதீங்க!

நுனிப்புல் மேயாதீங்க!
இந்த வாரம் நீயா நானா? பார்த்த பொழுது, அட நாம ரொம்ப நாளா நுனிப்புல்லா அசப்போட்டுட்டு இருந்த கருத்தா இருக்கே என எண்னினேன்
எதெற்கெடுத்தாலும் பள்ளிகளை குறை சொல்லுவது என ஆகி போன இச்சூழலில், பள்ளிகளை யாரும் குறை சொல்லாதது மகிழ்ச்சி.
ஆரம்ப கல்வி, மாணவர்களுக்கு, அடிப்படை திறன்களான கேட்டல், பேசுதல், எழுதுதல், ஆகிய திறன்களைத்தான், வளர்க்க முடியும்,(கல்வி என்பதே இயற்கைக்கு எதிரான செயல் என்பாதால், மாணவர்களை கற்றலில் ஈடுபட வைக்கவே பல்வேறு உத்திகளை கையாள வேண்டியுள்ளது) 
6 ஆம் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரை மாணவனுக்கு, யோசித்தல், ஊகித்தல், ஒன்றுடன் ஒப்பிட்டு நோக்குதல், உற்று நோக்குதல்,போன்ற திறன்களின் ஆரம்ப கட்ட திறன்களை வளர்த்தெடுக்கும் வகையில் கல்வி அமைக்கப்பட்டுள்ளது, 9,10 வகுப்புகளில் அதன் தொடர்ச்சியாக, அதை வெளிப்படுத்தும் வண்ணமாக கல்வி கற்பிகப்படுகிறது, இந்த வகுப்புகளில் மாணவன் இத்திறன்களை பெற வேண்டுமானால் அவன் அடிப்படைக்கல்வியை ஓரளவாவது பெற்றிருக்கவேண்டும். இதற்கு, மாணவனுக்கு கிடைக்கும் உணவு, சமூகச்சூழ்நிலை, குடும்ப சூழ்நிலை போன்ற காரணிகளும் காரணமாகின்றன. மாணவனின் 11, 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் ஒரே எண்ணம், நல்ல MARK வாங்க வேண்டும், ஏதேனும் ஒரு Professional ( ENGINEERING MEDICAL AERO NAUTICAL ENGINEERING ) படிப்பு படிக்கவேண்டும் ஒரு நல்ல வேலையில், நல்ல சம்பளத்தில், வேலைக்குச்சேரவேண்டும், அவ்வளவே, 
பள்ளிகளில் சமூக அக்கறை உள்ள மாணவர்களையோ, சமூக புரிதலையோ உருவாக்குவது கடினம், இயலாதது. கல்லூரிகள் எண்ணினால் மட்டுமே சமூகத்தையும் கற்பித்து அனுப்பமுடியும். இப்பொழுது Technically skilled மனிதர்களைத்தான் மட்டுமே கல்லூரிகள் உருவாக்குகின்றன
இந்த சமூகத்தைப்பற்றிய படிப்பு எங்கும் வழங்கப்படுவதில்லை, காரணம் அதை படித்தால் யாரும் வேலை தரப்போவதில்லை, நல்ல சம்பளமும் தர போவதில்லை, கீழ் வகுப்புகளில் பெற்ற திறன்கள், 
இப்பொழுது Technically skilled மனிதர்களைத்தான் கல்லூரிகள் உருவாக்குகின்றன.
அவர்களை நல்ல Techically skilled person களாக வளர்கிறார்கள், அவர்களுக்கு பயன்தருகிற, அவர்கள் பணி சார்ந்த, படிப்பு சார்ந்த விஸயங்களில் அவர்கள் மேலோட்டமாக இல்லை, ஒவ்வொன்றையும் ஆழமாகவும், தெளிவாகவும் தான்,படிக்கிறார்கள் 
சமூகத்தப்படிப்பதும் ஒரு விஞ்ஞானம் தான் என்பது நமக்கு கற்றுக்கொடுக்கப்படவில்லை, இதுவும் மறியாதைக்குறிய படிப்பு எனும் எண்ணம் நம் மக்களின் மனதில் ஏற்றாத வரை மாணவர்கள் சமூகத்தை மேலோட்டாமாகத்தான் பார்ப்பார்கள், சமூகத்தை, சமூக மாற்றத்தை இவ்வளவு மேலோட்டமாக பார்க்கிறார்களே, என நாம் ஆதங்கப்படுகிறோம்,. எனவே, சமூகத்தை படிப்பதற்கான வாய்ப்பை எப்படியேனும் எல்லா வகை கல்லூரிகளும் செய்ய வேண்டும், தனக்காக வாழ சுயநல மனிதர்களை மட்டும் உருவாகினால் எதிர்காலம் மிகக்கொடுமையான ஒன்றாக மாறிவிடும், சமூகத்தை கற்காதா மனிதன் மிக எளிதாக சக மனிதனால், ஒரு கூட்டத்தால், ஆள்வோரால், வேறு நாட்டினரால், என யாராலும் எமாறப்படலாம். விழித்துக்கொள்வோம்.
Professional படிப்புகளை, தான் வாழ பயன் படுத்திக்கொள்ளலாம், சமூகம் வாழ வேண்டுமானால், சமூகத்தை ஆழமாகவும், தெளிவாகவும் பார்கிறவர்களின் எண்ணிக்கை, மற்ற படிப்பு படிகிறவர்களுக்கு சமமாக இருக்க வேண்டும், 
அதற்கு ஒன்று,சமூகம் சார்ந்த படிப்புகளில் அதிக மாணவர்கள் சேர வேண்டும் அல்லது படிக்கும் படிப்புடன் சமூகம் சார்ந்த படிப்பையும் சேர்ந்து கற்பிக்க வேண்டும்.
இல்லையேல் ஆளும் முதலாளித்துவ பேரழிவு ஆட்சியாளர்கள், நம்மை கொன்று குவிக்கவும், தயங்க மாட்டார்கள். 
எனவே சமூகதைப்பற்றி நுனிப்புல் மேயாதீர்கள்,
நீயா நானா கூட அதைத்தான் செய்கிறது.
#

by fb... https://www.facebook.com/balasubramanian.rathinasamy 

1 comment:

  1. வணக்கம் என் பிளாக் பாருங்கள். நான் புதுகை...தலைமைஆசிரியர். நன்றிhttp://swthiumkavithaium.blogspot.com/

    ReplyDelete